சென்னை, நவ. 19- சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அர்ச் சனை செய்ய வந்த செவிலியரை தாக்கிய தீட்சிதர் இரண்டு மாதம் பூசை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் செவிலியர் லதா கொடுத்த புகாரின் பேரில், காவல்துறையி னர் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள தீட்சிதர் தர்ஷனை தேடிவருகின்றனர். இந்நிலை யில் பெண்ணை தாக்கிய தீட்சிதர் தர்ஷன் திருக்கோவில் பணியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்யப் பட்டதோடு, 5,000 ரூபாய் அபராதம் விதித்து பொது தீட்சிதர்கள் உத்தரவிட்டனர். இதனிடையே, தீட்சிதர் தர்ஷனை கண் டித்து வரும் வியாழனன்று (நவ.21) தெற்கு சன்னதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற அனு மதி கோரி செவிலியர் சங்கம் சார்பில் சிதம்ப ரம் டிஎஸ்பி கார்த்திகேயனிடம் மனு அளிக் கப்பட்டது. விரைவில் தீட்சிதர் தர்ஷன் கைது செய்யப்படுவார் என சிதம்பரம் டிஎஸ்பி உறுதியளித்தார்.