கலகக்குரல்கள் ஒலிக்கட்டும்!
கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்று தமிழில் ஒரு முதுமொழி உண்டு. இப்பொழுது பல கலகக்குரல்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சீனியாரிட்டி மீறல்கள் கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி, தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதம் ஒரு வகையில் கலகக்குரலே.
அதேபோல, மிகப் பெரிய நீதிமன்றமான சென்னை உயர்நீதிமன்றத்தில் (Judges strength-75) இருந்து மிகச் சிறிய நீதிமன்றமான மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு (Judges strength-3) மாற்றல் செய்யப்பட்டதை எதிர்த்து பதவியை துறப்பதற்கான கடிதம் அனுப்பிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (இப்போது பதவியில் உள்ள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் உயர்நீதிமன்ற நீதிபதியாக முதலில் 2001-இல் நியமிக்கப்பட்டவர்) தகில் ரமாணியின் செயலும் கலகக்குரலே.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் மாற்றம் நியாயமற்றது என சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் பலர் கூட்டாக கடிதம் மூலம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திருப்பதும் கலகக்குரல்தான்.
காஷ்மீரிகளின் உரிமைகள் மறுக்கப்பட்டு அனைத்துமக்களும் திறந்த வெளி சிறையில் வைக்கப்பட்டுள்ள நிலைமையில், தாங்கள் பதவியை துறக்கிறோம் என்று உலகிற்கு தெரிவித்த இரண்டு IAS அதிகாரிகள் — கண்ணன் கோபிநாதன், சசிகாந்த் செந்தில் — செயலும் கலகக்குரலே.
தொடர்ந்து கலகக்குரல்கள் ஒலிக்கட்டும்!
-Haribranthaman