திருநெல்வேலியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் தோழர் அசோக், சாதி ஆதிக்க வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டின் பல பகுதிகளிலும் இடதுசாரிகள் மற்றும் முற்போக்காளர்களின் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. தமிழகம் முழுவதும் இதைக் கண்டித்து சிபிஎம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கேரளத்திலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், அசோக் படுகொலையைக் கண்டித்து கண்டன இயக்கங்களை நடத்தினர்.
இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாரில் பகுதி செயலாளர் பைசல் பின்சா தலைமையில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் மினி கண்டன உரையாற்றினார்.
கொல்லம் மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஊர்வலம்
திருச்சூரில் நடைபெற்ற கண்டன போராட்டம்
இடுக்கி மாவட்டம் சாந்தன்பாறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்டகுழு உறுப்பினர் அனிஸ் தலைமை தாங்கினார்.
இடுக்கி மாவட்டம் அடிமாலியில் கண்டன ஊர்வலம் மாவட்டக் குழு உறுப்பினர் ஜோமன் தலைமையில் நடைபெற்றது.
மலப்புறம் மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன பேரணி
இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் கண்டனப் போராட்டம் பகுதிசெயலாளர் அருண் தலைமையில் நடைபெற்றது.