சென்னை, ஆக. 1- சட்டக்கல்லூரிக்கு முன்னாள் அமைச்சர் கக்கன் மற்றும் அம்பேத் கர் பெயரை சூட்ட தமிழக அரசு பரி சீலிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரி வித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் புதுப் பாக்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பட்டரைப் பெரும்புதூர் ஆகிய இடங்களில் செயல்படும் அரசு சட்டக் கல்லூரிகள் ஒரே பெய ரில் செயல்படுவதால் மாணவர்க ளுக்கும், மற்றவர்களுக்கும் குழப்பம் ஏற்படுவதாக கூறப்படு கிறது. எனவே ஒரு கல்லூரிக்கு டாக்டர் அம்பேத்கர் பெயரையும், மற்றொரு கல்லூரிக்கு தமிழக முன்னாள் அமைச்சர் கக்கன் பெய ரையும் வைக்க அரசு பரிசீலிக்க வேண்டும். அல்லது தமிழக அரசே இதுகுறித்து முடிவு செய்யலாம் என்று ஒரு வழக்காக விசாரித்த நீதி பதிகள் கிருபாகரன், பிரபாகரன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர். மேலும் காஞ்சிபுரம் மற்றும் திரு வள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் மாண வர்களின் பாதுகாப்பிற்காக அமைக் கப்பட்டுள்ள காவல் நிலையங்களில் போதிய எண்ணிக்கையில் காவ லர்கள் பணி அமர்த்தப்பட வேண்டும். உடற்கல்வி இயக்கு னர்களை நியமித்து படிப்புடன் விளையாட்டையும் ஊக்குவித்து மாணவர்கள் மத்தியில் ஆரோக்கி யமான சூழலை உருவாக்க வேண்டும். மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப் படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்” என்று நீதி பதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.