tamilnadu

img

கட்டட அனுமதி பெற அரசு ஆலோசனை மையம்

சென்னை,ஜூலை 30 -  பொதுமக்கள் மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி பெறுவது தொடர்பான விதிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கும் மையங்கள் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி நகர் ஊரமைப்புத் துறை தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து சார்நிலை அலுவலகங்களிலும் தகவல் மற்றும் ஆலோசனை மையங்கள் அமைக்கப்படவுள்ளன. அவற்றில் பணியாற்றும் பொது தகவல் அலுவலர்கள், மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள். திட்ட அனுமதி தொடர்பாக விண்ணப்ப ங்கள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ள கோப்புகளின் நிலை குறித்த விவரங்களை அளித்தல், வாய்மொழியாக தகவல்களை கோருபவர்களுக்கு பதிவேடுகளை சரிபார்த்து தகவல்களை வழங்குதல் உள்ளிட்ட பணிகளையும் அலுவலர்கள் மேற்கொள்வார்கள். மேலும் நேரில் சென்றும், தொலைபேசி வாயிலாகவும் ஆலோசனைகளை பெற ஏதுவான வகையில் இந்த ஆலோசனை மையங்கள் அமைக்கப்படவுள்ளன.