சென்னை, அக்.2- சென்னை ஐஐடி-யின் 56-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதுதவிர ‘’இந்தியா-சிங்கப்பூர் ஹேக்கத்தான் 2019’’ என்ற நிகழ்ச்சியும் தரமணியில் உள்ள சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரை யாற்றினார். இந்நிலையில், இந்நிகழ்ச்சிகளை முறைப்படி நேரலையில் ஒளிபரப்பு செய்யவில்லை என்ற காரணத்தால் ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படை யில் மத்திய அரசின் தூர்தர்ஷன் சென்னை நிலைய உதவி இயக்குநர் வசுமதி, செவ்வாய் கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.