tamilnadu

img

இலவச மின்சாரத்தை ரத்து செய்யாதீர்!

அத்தியாவசியப் பொருட்களைப் பட்டியலில் இருந்து நீக்குவதா?

திருவள்ளூர், ஜுன் 10 - வெங்காயம், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை  அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கிய புதிய அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 2020ஐ மத்திய பாஜக அரசு திரும்ப பெறும் வரை  போராட்டம் தொடரும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண் முகம் தெரிவித்தார். புதிய அத்தியாவசிய பொருட்கள் சட்டம் (2020)  மற்றும் இலவச மின்சாரம் ரத்து என்கிற ஆணை நகலை எரிக்கும் போராட்டம் புதனன்று (ஜுன்-10) தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பிலும், ஜனநாயக மாதர் சங்கத்தின் ஆதரவுடனும் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் சுமார் 100 மையங்களில் நடந்த இப்போராட்டத்தில் பங்கேற்று 3ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அத்தியாவசிய பொருட்கள் சட்டம் (1955) மாற்றி அமைத்தது. புதிய அத்தியாவசிய பொருட் கள் சட்டம் (2020) என்று மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் பருப்பு வகை கள், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை ஆடம்பர பொருட்களாக மாறும், விவசாய உற்பத்தி பொருட்களை கொள்முதல் செய்யும் கடமையி லிருந்து அரசு விலகும், இந்த பணியை பெருமுத லாளிகளிடம் ஒப்படைக்கும், உணவு பதுக்கல் கூடுதலாகும் ஆபத்து உள்ளது. இந்நிலையில், செயற்கையாக உணவுப் பஞ்சம் ஏற்படும் போக்கை அனுமதிக்கக் கூடாது, விவசாயிகளை சுரண்டுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி கார்ப்பரேட்டுகளை சிவப்புக் கம்பளம் விரித்து  வரவேற்கும் மத்திய அரசின் புதிய அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் (2020) மற்றும் இலவச மின்சாரம் ரத்து என்ற ஆணை நகலை எரிக்கும் போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செய லாளர் பெ.சண்முகம் தலைமையில் திருவள்ளூர் மாவட்டம் தாமரப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.சம்பத், மாவட்ட செயலாளர் பி.துளசிநாராயணன், துணை நிர்வாகிகள் பெ.ரவி, எம்.பழனி, விதொச மாவட்ட தலைவர் ஏ.ஜி.கண்ணன், மாவட்ட செய லாளர் அ.து.கோதண்டன், துணைத் தலைவர் இ.ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் எஸ். கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.செல்வ ராஜ், டி.பன்னீர்செல்வம், சகானா  உட்பட ஏராளமானோர் கைதாகினர்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘மத்திய அரசாங்கம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக, பதுக்க லில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு சாதகமாக அத்தியா வசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தத்தை ஏற் படுத்தியுள்ளது. இதன் விளைவாக வெங்காயம், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மக்கள் அன்றாடும் பயன்படுத்தும் பொருட் களை எவ்வளவு வேண்டுமானாலும் கொள்முதல் செய்து, எவ்வளவு நாட்களுக்கு வேண்டுமானாலும் பதுக்கி வைக்கலாம். இப்படி பெரு வியாபாரிகள், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அனுமதி வழங்கக் கூடிய சட்ட திருத்தத்தை பாஜக அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள 130-கோடி மக்களுக்கும் எதிரான ஒரு நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. நாடே கொரோனா வால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து எப்படி மீள்வது என மக்கள் துடித்துக்கொண்டு இருக்கும் போது, மத்திய பாஜக அரசாங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு விவசாயத்தை திறந்து விடுகிறது. இந்தியாவை கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக மாற்றுவதற்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது” என்று சாடினார். நாட்டில் 85-விழுக்காட்டினர் சிறு, குறு விவசாயிகள் உள்ளனர்.ஒரே நாடு, ஒரே சந்தை என்கிற முழக்கத்தை முன்வைத்து சிறு, குறு விவசாயிகளை ஒழித்துக்கட்டுகிற நடவடிக்கை க்கு எதிராகத் தான் இந்த சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.மேலும் இது நாடு  தழுவிய பிரச்சாரம், நாடாளுமன்றம் முற்றுகை என்ற வடிவங்களை எடுக்கும்.  புதிய அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்  கூறினார்.