மதுரை, ஏப்.30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பின் (சிஐடியு) ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும், சிஐடியு விருதுநகர் மாவட்ட முன்னாள் தலைவருமான தோழர் எம். மீனாட்சிசுந்தரம், ஏப்ரல் 30 வியாழனன்று அதிகாலை உடல்நலக் குறைவு காரண மாக காலமானார். அவருக்கு வயது 99.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்தி ரம் வட்டம் பாப்பாங்குளம் கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த தோழர் எம்.மீனாட்சிசுந்தரம், 1942 இல் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள ஹார்வி மில்லில் பஞ்சாலை தொழிலாளியாக சேர்ந்தார். அப்போதைய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஏ.நல்லசிவனுடன் இணைந்து அப்பகுதியில் தொழிற்சங் கத்தையும், கட்சியையும் உருவாக்கி யதில் முக்கிய பங்காற்றினார். தொழிற் சங்க பணியில் ஈடுபட்டதற்காக பொய் வழக்கு புனையப்பட்டு 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 1950 இல் மின்வாரியத்தில் தற்காலிக தொழிலாளி யாக சேர்ந்த அவர், பின்னர் மதுரை யிலும், அதன்பின்னர் விருதுநகர் மாவட் டத்திலும் தொழிற்சங்கம் மற்றும் கட்சி பணிகளை தொடர்ந்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக, சிஐ டியு மாவட்டச் செயலாளர், தலைவராக பல்வேறு சங்கங்களின் தலைவராக செயலாற்றிய தோழர் மீனாட்சிசுந்தரம், அனைத்து தோழர்களாலும் ‘எம்.எம்.எஸ்.’ என்று அன்புடன் அழைக்கப் பட்டார்.
உடல்நிலை காரணமாக கட்சி மற்றும் சங்க பொறுப்புகளிலிருந்த விடுவிக்கப் பட்டு, மதுரையில் தமது மகன் பாரதி யுடன் வசித்து வந்தார். சமீபத்தில் அவ ரது 99 ஆவது பிறந்தநாளையொட்டி தோழர்கள் அவரது இல்லத்திற்கு சென்று தங்களது மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.
இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக வியாழனன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு செய்தி அறிந்து கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர் சு.வெங்கடேசன், மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ் ணன், தீக்கதிர் பொறுப்பாசிரியர் எஸ்.பி. ராஜேந்திரன், கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மா.கணேசன், இரா.லெனின், ம.பால சுப்பிரமணியம், வை.ஸ்டாலின், புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. ராஜேந்திரன், கே.அரவிந்தன், பகுதிக் குழு செயலாளர்கள் பி.ஜீவா, யு.எஸ். அபுதாகீர், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம், மாவட்டத்தலைவர் வீர ணன், வாலிபர் சங்கத்தலைவர் கள் பி.கோபிநாத், டி.செல்வராஜ், காங்கி ரஸ் இளைஞர் அமைப்பின் துணைத் தலைவர் மகேஷ் உள்பட பலர், தோழர் மீனாட்சிசுந்தரம் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி னர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்திலும் புகழஞ்சலி செலுத்தினர்.
மாநில செயற்குழு அஞ்சலி
தோழர் மீனாட்சிசுந்தரம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத் துள்ள செய்தி வருமாறு: ‘எம்எம்எஸ்’ என்று தோழர்களால் அன்போடு அழைக்கப்படும் தோழர் மீனாட்சிசுந்தரம் விக்ரமசிங்கபுரம் பஞ் சாலை போராட்டத்தில் தோழர் ஏ.நல்ல சிவன் அவர்களோடு கைது செய்யப் பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்.
தோழர் மீனாட்சி சுந்தரம் நீண்ட நெடுங்காலமாக மின்சார ஊழியர் சங்கத்திலும், மின்சார ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பிலும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியிலும், தொழிற்சங்க இயக் கத்திலும் மிக முக்கியமான பங்கினை ஆற்றியவர். பணி ஓய்வுக்குப் பிறகும் இடதுசாரி இயக்கத்தோடு இரண்டறக் கலந்து பணியாற்றியவர்.
99 வயதை அடைந்து அடுத்த 6 மாத காலத்தில் 100 வயதை அடையவிருந்த நேரத்தில் அவர் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனை யும் அளிக்கிறது. தோழர் மீனாட்சி சுந்தரம் அவர் களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்து வதுடன் அவரது பிரிவால் வாடும் குடும் பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கி றேன்.
என்.சங்கரய்யா இரங்கல்
தோழர் மீனாட்சிசுந்தரம் மறைவு செய்தி அறிந்து, அதிர்ச்சியும், துயரமும் தெரிவித்துள்ள கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சிக்கு தோழர் மீனாட்சிசுந்தரம் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்துள்ளார்.
கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தி யக் குழு உறுப்பினர்கள் ஏ.கே.பத்ம நாபன், டி.கே.ரங்கராஜன், பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், மதுக்கூர் இராமலிங்கம், சிஐடியு மாநில தலைவர்கள் அ.சவுந்தர ராசன், ஜி.சுகுமாறன், எஸ்.கண்ணன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.ஏ.பெருமாள், எஸ்.பாலசுப்பிரமணி யன், எம்.மகாலட்சுமி, விருதுநகர் மாவட்டச் செயலாளர் கே.அர்ச்சுணன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பின் முதுபெரும் தலைவர் எஸ்.பஞ்ச ரத்தினம், முன்னாள் தலைவர் எஸ்.எஸ். சுப்பிரமணியன், மாநில பொதுச் செயலா ளர் எஸ்.ராஜேந்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மாதர் சங்க பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் உள்ளிட்ட தலைவர்கள் தோழர் மீனாட்சி சுந்தரம் மறைவு செய்தி அறிந்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தோழர் மீனாட்சிசுந்தரத்திற்கு லெனின், பாரதி ஆகிய மகன்களும், வாலண்டினா, ஜோதி, ராமலெட்சுமி என்ற மகள்களும் உள்ளனர். லெனின் தமுஎகச மதுரை புறநகர் மாவட்ட செயலாளராகவும், பாரதி சிறு, குறு தொழில் முனைவோர் பாதுகாப்பு குழுவிலும் செயலாற்றி வருகின்றனர்.