tamilnadu

img

முன்னாள் நீதிபதி மோகன் மறைவுக்கு சிபிஐ இரங்கல்

சென்னை,டிச.30- ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.மோகன் டிச.27  வெள்ளியன்று பிற்பகல் காலமானார் அவருக்கு வயது (89).  கடந்த 1954 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து, சட்டப்பணிகளை மேற்கொண்ட எஸ். மோகன் தனது பரந்து  பட்ட சட்ட அறிவு மற்றும் அனுபவத்தில் அரசு வழக்கறிஞராகி , சென்னை உயர்  நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பொறுப் புக்கு உயர்ந்தவர். கர்நாடக மாநில தற்கா லிக ஆளுநர் பொறுப்பில் செயல்பட்டவர். 1991 முதல் 1995 வரை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்தின் மீது பேரார்வம்  கொண்ட நீதிபதி மோகன் தமிழிலும் ஆங்கி லத்திலும் பல நூல்கள் படைத்துள்ளார்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரி வித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சி அதி காரத்தில் உள்ளோர் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்து வரும் நேரத்தில், ஜனநாயக நெறிமுறைகளை பாதுகாப்ப தற்கான போராட்டம் வலிமை பெற வேண்டிய காலத்தில் நீதிபதி மோகன் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்றும் அன்னாரின் மறைவுக்கும்,அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சட்டப் பணித்துறையினருக்கும் ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்துக்கொள்ளவ தாகவும் தெரிவித்திருக்கிறார்.

;