சென்னை, ஏப்.23- கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில், 20 ஆயி ரம் சதுர அடியில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்பு தல் அளித்துள்ளது.
சென்னையில் போக்கு வரத்து நெரிசலை தடுக்க, கோயம்பேடு மார்க்கெட் வளாகம், 1996ல் உருவாக்கப்பட்டது. இந்த வளாகத் தில், 3,000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தினமும் லட்சக்கணக் கானோர் வந்து செல்கின்றனர். வெளியில் இருந்து வரும் வாகனங்க ளுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால், வாகனங்களை நிறுத்த முறையான இடவசதி எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. இத னால், பொது மக்கள் நடைபாதைகளிலேயே வாக னங்களை நிறுத்தும் நிலை ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக, இந்த வளாகத்துக்கு அருகில், புதிய அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்க, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது. இதன்படி, இங்கு, 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.