39,500 வழக்கு
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 39 ஆயிரத்து 436 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 39 ஆயிரத்து 517 நபர்கள் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இருசக்கர வாகனம் 34 ஆயிரத்து 574, மூன்று சக்கர வாகனம் 440, நான்கு சக்கர வாகனம் 1209 என 36 ஆயிரத்து 223 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
எஸ்.பி.க்கு தொற்று
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணனுக்கு கொரானா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.