சென்னை,ஜூன் 29- தமிழக சுகாதாரத்துறையில் தங்களைப் பதிவு செய்து கொள்ளாத 20 ஆயிரம் மருத்துவம் சார்ந்த நிறு வனங்கள் மூடப்படும் அபாயத்தைச் சந்தித்துள்ளன. தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டம் 2018-ன் கீழ், மாநிலத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனி யார் மருத்துவ மனைகள், கிளினிக்குகள், ரத்த வங்கி கள், ஸ்கேன் மையங்கள் ஆகியவை, சுகாதாரத்துறை யில் பதிவு செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள் ளது. மே 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே உத்தரவிடப்பட்டது. 50 ஆயிரத்துக் கும் மேற்பட்ட மருத்துவம் சார் நிறுவனங்கள் உள்ள நிலையில், தற்போது வரை 28ஆயிரம் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. சிறிய கிளினிக்குகள், ரத்த வங்கிகள் போன் றவை பதிவு செய்யவில்லை என்றும், அவை தற்போது முதல் சட்டவிரோத மாக கருதப்படும் என்றும் மருத் துவ சேவைகள் இயக்கம் கூறியுள்ளது. எனவே பதிவு செய்து கொள்ளாத நிறுவனங்கள் இனி மூடப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதை தவிர்க்க, அபராதத்துடன் கூடிய கால நீட்டிப்பு கொடுப் பதற்கு அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறப் பட்டுள்ளது. பதிவு செய்ய விண்ணப்பித்த நிறுவனங் களை, குழு ஆய்வு செய்து உரிய வசதிகள் உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னர் மேலும் ஐந்து ஆண்டு கள் இயங்க அனுமதி அளிக்கும்.