காலத்தை வென்றவர்கள்
செண்பகராமன் தமிழகத்தைச் சார்ந்த இந்திய விடுதலைப் போராளி் ஆவார். ‘ஜெய் ஹிந்த்’ எனும் முழக்கத்தை முதலில் முழங்கியவர் . 1933 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றிலும் அவர் முழங்கினார். இதைக் கேட்ட நேதாஜி இம்முழக்கத்தை வழிமொழிந்து உலகெங்கும் பரப்பினார்.
1914 -ல் உலகப்போர் மூண்ட போது இங்கிலாந்தை எதிர்த்து செர்மனி போரிட்டது. இங்கிலாந்தின் கடற்படையைக் கலங்க வைக்க செரு மானியர்கள் நீர்மூழ்கிக் கப்பலைப் பயன்படுத்தினர். ‘எம்டன்’ என்ற பெயர் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் செண்பகராமன் உதவிப் பொறியாளராகப் பணியாற்றினார். வங்காள விரிகுடாவிற்கு வந்த “எம்டன்”, ஆங்கில அரசுக்குச் சொந்தமான இரு பெரிய எண்ணெய்க் கிடங்குகளின் மீதும் சென்னைத் துறைமுகத்தின் மீதும், புனித ஜார்ஜ் கோட்டையிலும் திருகோணமலைத் துறைமுகத்தின் மீதும் பீரங்கித் தாக்குதல் நடத்தியது.இதனால் சென்னைக் கோட்டை உயர் நீதிமன்றத்தின் வெளிப்புறச் சுவரின் ஒருபகுதி அடியோடு பெயர்ந்து விழுந்தது. கோட்டையை நோக்கி வீசப்பட்ட குண்டு வெடிக்காமல் மண்ணில் புதைந்தது. அதன் வீரியம் குறைக்கப்பட்டு எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டது.
இதனை இன்றும் அங்கு காணலாம். முதல் உலகப்போருக்குப் பின் செர்மனியில் நாட்சிக்கட்சி ஹிட்லர் தலைமையில் உருவாகி வளர்ந்தது. ஹிட்லர் செர்மனியின் சர்வாதிகாரி ஆனார். ஒரு சமயம் செண்பகராமன் ஹிட்லருடன் உரை யாடிக் கொண்டிருந்த போது “இந்தியர்கள் பிரித்தானியருக்கு அடிமையாக இருக்கவே தகுந்தவர்கள். இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தால், நாட்டைத் திறமையாக ஆளும் தகுதி இந்தியருக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே “ என்று இந்தியரைத் தாழ்த்திக் கூறினார். இதைக் கேட்ட செண்பக ராமன் கொதித் தெழுந்தார். ஹிட்லருக்கு எதிராகத் திறமையாக வாதாடி, எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்பு கேட்கச் செய்தார்.
தங்கள் தலைவரை வாதாடி வென்ற செண்பகராமனை, நாஜியர் வெறுத்தனர். அவர் கலந்து கொண்ட அரசாங்க விருந்து ஒன்றில் பரிமாறப்பட்ட உணவில் திட்டமிட்டு நஞ்சைக் கலந்தனர். அது அவரை நோயாளியாக்கி படுத்த படுக்கையில் வீழ்த்தியது. தீவிர சிகிச்சைக்குப் பின் சிறிது நாளில் நலம் பெற்ற செண்பகராமனை, நாஜிகள் மீண்டும் தாக்கிப் படுகாயப் படுத்தினார்கள். அதுவே அவரை மரணப் படுக்கையில் வீழ்த்தியது. 1934 மே 26 -ல் செண்பக ராமனின் உயிர் பிரிந்தது.
பெரணமல்லூர் சேகரன்