tamilnadu

img

மெக்சிகோவில் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலி

மெக்சிகோ நாட்டின் வெராகுரூஸ் நகரில் நடந்த குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் சிலர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர்.


மெக்சிகோ நாட்டின் கிழக்குப் பகுதியான வெராகுரூஸ் போதைப்பொருள் கடத்தலிற்கு பெயர் போனது மற்றும் அவ்வப்போது அப்பகுதியில் கும்பல் கொலைகள் மற்றும் இரு கடத்தல் குழுக்களுக்கிடையிலான துப்பாக்கி சண்டை நடைபெறும். மெக்சிகோ நாட்டின் பொதுமக்கள் அமைச்சகம் கூறுகையில், குடும்ப மறு இணைவு நிகழ்ச்சிக்கு துப்பாக்கியுடன் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு மதுபான கடை உரிமையாளர் எல் பெக்கே என்பவர் குறித்து விசாரித்துள்ளது. பின்பு திடீரென அந்த குழு விழா நிகழ்ச்சியினர் கூடியிருந்த இடத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 7 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 1 குழந்தை என மொத்தம் 13 பேர் பலியாகினர் என கூறியுள்ளது.


இதுவரை துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை. கடந்த 2006லிருந்து இதுவரை சுமார் 2.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


;