துருக்கியில் கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உலகின் பல நாடுகளில் கொரோனாவை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் துருக்கியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் இதுவரை 11 ஆயிரத்து 145 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.