ஐரோப்பாவில் உள்ள நகரங்களில் மிக அழுக்கான நகரம் பாரிஸ் என பத்திரிகை செய்தி ஒன்று வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிம் வில்ஷெர் என்ற ஊடகவியலாளர், பத்திரிகைகளில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த கட்டுரையில், பாரிஸில் சிகரெட் துண்டுகள், குப்பை கூளங்கள் நிறைந்திருப்பதாகவும், ஐரோப்பாவில் மிக தூய்மையற்ற நகரம் பாரிஸ் தான் என்று கூறப்பட்டிருந்தது. இந்த தகவலை இங்கிலாந்தின் புகழ்பெற்ற ‘தி கார்டியன்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த கட்டுரைக்கு பாரிஸ் மக்கள் தரப்பிலும், அரசியல் தரப்பிலும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பாரிஸ் நகரம் குறித்த இந்த குற்றச்சாட்டு, சுற்றுலாப் பயணிகளின் வருகையை குறைக்கும் ஆபத்து உள்ளது எனவும், குறிப்பாக அடுத்து வரும் நகரசபைத் தேர்தலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.