tamilnadu

img

பாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் - சர்வதேச நடுவர் நீதிமன்றம் உத்தரவு

சுரங்க பணி ஒப்பந்தம் ரத்து தொடர்பான வழக்கில் சர்வதேச நடுவர் நீதிமன்றம் பாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ரெகோ நகரில் தங்கம் மற்றும் தாமிரம் ஆகிய வளங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுரங்க நிறுவனங்கள் இங்கு தங்கம் மற்றும் தாமிரம் வெட்டி எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் சிலி மற்றும் கனடாவை சேர்ந்த ‘டிசிசி’ என்கிற கூட்டு நிறுவனத்துக்கு ரெகோ நகரில் சுரங்க பணிகள் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. கடந்த 2011-ஆம் ஆண்டு, அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பலுசிஸ்தான் மாகாண அரசு திடீரென ரத்து செய்தது. இதை எதிர்த்து, அந்நிறுவனம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் அந்நிறுவனத்தின் ஒப்பந்தம் பாகிஸ்தான் சட்டத்துக்கு எதிரானது என கூறி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அதனை தொடர்ந்து, அந்த நிறுவனம் இந்த விவகாரத்தை சர்வதேச நடுவர் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றது. அங்கு இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதில் பாகிஸ்தான் அரசு சட்டவிரோதமான முறையில் ‘டிசிசி’ நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்வது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கு 5.97 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.41 ஆயிரம் கோடி) சர்வதேச நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததுள்ளது.
 

;