இஸ்லாமாபாத், ஜூன் 10 - பாகிஸ்தானில் போலி வங்கி கணக்குகள் தொடங்கி அதன் மூலம் வெளிநாட்டுக்கு பணம், அனுப்பிய முறைகேடு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரி, அவருடைய சகோதரி பர்யால் தால்பூர் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையை அந்நாட்டு ஊழல் தடுப்பு பிரிவு தீவிரப்படுத்தியதை யடுத்து ஜாமீன் கோரி இஸ்லாமாபாத் உயர்நீதி மன்றத்தில் சர்தாரி மனுதாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அதனை நிராகரித்துவிட்டது. இதனையடுத்து சர்தாரியை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.