tamilnadu

img

நேபாளத்தில் நிலச்சரிவு... 10 பேர் பலி... 

காத்மாண்டு
இமயமலை சாரலில் உள்ள நாடான நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் சில மாவட்டங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் மைக்டி, ஜஜர்கோட், சிந்துபல்சோக் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்த 3 மாவட்டங்களில் நிலச்சரிவில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோரில் 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மாயமான 40-க்கும் மேற்பட்டோரை மீட்க மீட்புக்குழுவினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். நேபாளத்தில் பல இடங்கள் வெள்ளத்தால் சிக்கியுள்ள நிலையில், மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள்ளது.  

;