tamilnadu

img

ஒரே நாளில் 54771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பிரேசிலில் ஒரே நாளில் 54,771 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டு மக்களிடையே  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. . சனிக்கிழமை காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,206 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதையடுத்து அங்கு மொத்த உயிரிழப்புகள் 48,954 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 10,32,913 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 50,7000 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்  என்று சுகாதாரத்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்று  ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.