பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் இருந்து ராவல்பிண்டி செல்லும் பேருந்து சிலாஸ் மாவட்டத்தில் சென்றபோது பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து, அங்கிருந்த மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். மேலும்15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து, தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், மீட்பு பணிகள் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.