tamilnadu

img

மியான்மரில் நடந்த நிலச்சரிவில் சிக்கி 50 பேர் பலி?

மியான்மர் நாட்டில் சுரங்கப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 50 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மியான்மர் நாட்டில் காச்சின் மாநிலம் ஹபி கந்தில் உள்ள சுரங்கத்தில் இன்று எதிர்பாராத விதமான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 50 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் சிலர் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என்ற தகவலால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் வாய்ப்புள்ளது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடம் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 


;