tamilnadu

img

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை நடத்த ஊழியர்களே விருப்பம்!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை நடத்த, அந்நிறுவனத்தின் ஊழியர்களே விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் 3000 கோடி ரூபாயை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடி காரணமாக கடந்த சில நாட்களாக மூடிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்நிறுவனத்தை வாங்க எந்தவொரு நிறுவனமும் ஆர்வம் காட்டாவில்லை. மேலும் இது குறித்து எஸ்.பி.ஐ வங்கியும் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடாத நிலையில், ஜெட் ஏர்வேஸின் முன்னாள் ஊழியர்கள், நிர்வாக கட்டுப்பாட்டை தாங்கள் எடுத்துக் கொளவதாக முன் வந்துள்ளனர்.

இதற்காக 3000 கோடி ரூபாயை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் ஊழியர்களின் ஒரு பகுதியினர் கூறியுள்ளனர். இந்த ஊழியர்களின் குழு, கடன் வழங்கிய வங்கிகளான எஸ்பிஐ, ஐசிஐசிஐ மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளை அணுகியுள்ளனர்.

மேலும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் வங்கிகளுடன் இணைந்து சிறுபான்மை பங்குதாரர்களாகவும் செயல்பட்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை எடுத்து நடத்த விரும்புவதாகவும், இதற்காக ஒரு பரிவர்த்தனை வாங்குவதற்கான திட்டத்துடன் (LBO) முன்வைத்துள்ளனர்.

இந்த ஊழியர்கள் குழுவில் சங்கரன் பி, ரகுநாதன் தலைமையிலான வல்லுனர் குழுவில், விமானிகள், பொறியாளர்கள் மற்றும் ஊழியர் சங்கமும் இணைந்து பல்வேறு மறுமலர்ச்சி திட்டங்களை தீட்டிள்ளதாகவும், இதை பங்குதாரர்களிடமும் கூறியுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்த திட்டத்திற்கான அறிக்கையில், ”ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் முதலில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் தற்போதுள்ள கடன் அளிப்பவர்களிடம் இருந்து கடன் வாங்குவதோடு, நிறுவனத்தில் முதலீடு செய்து இறுதியில் பங்குதாரர்களாகவும் இணைவார்.

நீங்கள் நிறுவனத்தை நம்ப வேண்டாம் எங்களை நம்பி கடன் கொடுங்கள் அதுவும் தனிப்பட்ட கடனாக கொடுங்கள், அதை ஊழியர்கள் நிறுவனத்தின் செயல்பாட்டு மூலதனமாக எடுத்துக் கொள்வார்கள். இதன் படி வங்கிகள் ஊழியர்களுக்கு 1,500 கோடி கடன் வழங்க முடியும், இது ஒவ்வொரு ஊழியரின் 6 மாத சம்பளம் தான் இந்த தனிப்பட்ட கடனாக இருக்கும். ஆனால் இந்த கடனை ஊழியர்கள் முதலீடாக ஜெட் ஏர்வேஸின் எஸ்.பி.ஐ வங்கியில் உள்ள 51 சதவிகித பங்குகளை வாங்கவும், எட்டிஹாட் (Etihad) உள்ள 12.5 சதவிகித பங்குகளை வாங்கவும் இந்த மீதமுள்ள 200 கோடி ரூபாய்க்கு புதிய பங்கு தாரர்களிடமும் வாங்கலாம். இந்த நிலையில் இந்த ஊழியர் குழு ஜெட் ஏர்வேஸை கட்டுப்படுத்த முடியும்.

இதற்கு அடுத்தகட்டமாக அடிக்கடி பறக்கும் ப்ளையர்ஸ் மூலம் பணத்தை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு உரித்தான நான்கு டிக்கெட்களை வாங்க, டிக்கெட் வாங்குபவர்களுக்கு வங்கிகள் 10,000 ரூபாய்க்கு கடன் உதவி அளிக்கலாம். இந்த டிக்கெட்கள் 2 ஆண்டுக்கு செல்லும் என்றும், இதன் மூலமாக நிதியை உயர்த்தலாம். இதையடுத்து ஏற்கனவே பணியாற்றும் நிலையில் உள்ள ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் டிக்கெட் பேக்குகளை வாங்குவோர் அனைவருக்கும் விருப்பமான அடிப்படையில் பங்குகள் வழங்குவதற்கான தீர்மானத் பத்திரத்தை நிறைவேற்றுவர். ஒவ்வொரு 150 பேருக்கும் , ஒவ்வொருவருக்கும் 100 பங்குகள் வீதம் தரலாம். இதன் மூலம் 12,000 கோடி ரூபாய் வரை மூலதனம் உயர்த்தப்படும். மேலும் இந்த நிதி திரட்டல் 20,000 கோடி ரூபாயாக உயர்த்தப்படும், இதன் மூலம் இந்த நிதி செயல்பாட்டு மூலதனத்திற்காகவும், ஐந்து ஆண்டுகள் கழித்து கடனாளர்களுக்கு திரும்ப செலுத்துவதற்கும் இந்த நிதி உபயோகப் பயன்படும்” என்று இந்த ஊழியர் குழு அளித்துள்ள அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.