tamilnadu

img

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனியாருக்கு தாரைவார்ப்பு?

பாஜக அரசின் அடுத்த விற்பனையா?

புதுதில்லி, ஜூன் 6-  இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உட்பட மூன்று பொதுத்துறை வங்கிகள் தனியாரிடம் ஒப்படைக்கப் பட உள்ளதாக தெரிகிறது. கடந்த ஆண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பத்து பொதுத்துறை வங்கிகளை நான்கு வங்கிகளுடன் இணைத்திட தீர்மானித்தார். அவ்வாறே இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கியுடன் இணைக்கப்பட்டது போன்று வேறு சில வங்கிகளும் இணைக்கப்பட்டன.

இவ்வாறு வங்கிகள் இணைப்பு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ‘நிதி ஆயோக்’ தற்போது அவ்வாறு இணைக்கப்படாத வங்கி களைத் தனியாரிடம் தாரைவார்த்திட, அரசாங் கத்திற்குப் பரிந்துரைத்திருப்பதாகத் தெரிகிறது. இதற்கான வேலைகளை அரசு அலுவலர்கள் ஏற்க னவே துவங்கிவிட்டார்கள் என்றும் தெரிய வருகிறது. தனியாரிடம் ஒப்படைக்கப்படுவது என்பது இன்றைய தேதியில் நூறு சதவீதம் இறுதிப்படுத் தப்படவில்லை என்ற போதிலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் - சிந்த் வங்கி, பேங்க் ஆப் மகாராஷ்ட்ரா ஆகியவற்றைத் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது. இந்த வங்கிகள் அனைத்தும் முன்பு இந்தியன் வங்கியை அலகாபாத் வங்கியுடன் இணைத்த தைப் போன்று வேறெந்த வங்கிகளுடனும் இணைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை.

நிதி ஆயோக்  அமைப்பு, சில தொழில் நிறு வனங்களுக்கும் வங்கி உரிமங்கள் அளித்திடவும் பரிந்துரைத்திருக்கிறது. இவற்றில் அரசாங்கம் அடுத்தகட்ட நடவ டிக்கையை எடுப்பதற்கு முன்பாக, தற்போதுள்ள வங்கி தேசியமயச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர முடிவெடுத்திருக்கிறது. இதுதொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி கூறுகை யில், சில தொழில் நிறுவனங்களுக்கு 10 சதவீதம் அளவிற்கு வங்கிப்பணிகளைச் செய்திட, வங்கி உரிமங்கள் அளிக்கப்பட இருப்பதாகவும், எனினும் அவை முழுமையான வங்கிகளாக செயல்படத் தகுதியற்றவை என்றும் தெரிவித்துள்ளது.

மத்திய அரசாங்கத்தின் நோக்கத்தின்படி நான்கு பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். மற்ற அனைத்தும் தனியாரிடம் தாரைவார்க்கப்பட்டு விடும் என்று ஏற்கனவே மத்திய நிதியமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அந்த அறிவிப்புக்கு மத்திய அரசு செயல்வடிவம் கொடுக்க உள்ளதாக கடந்த நான்கு நாட்களாக நாட்டில் பிரபலமாக உள்ள வணி கம் சார்ந்த செய்திகளை அளிக்கும் நாளிதழ்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் இந்த வங்கி 1937 ஆம் அண்டு தமிழ கத்தில் பிரபல வணிக குடும்பத்தை சேர்ந்த முத்தையா செட்டியாரால் தொடங்கப்பட்டதாகும்.  ஆரம்பத்தில் தனியார் வங்கியாக இருந்தது. தனி யார் வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்ட போது இதுவும் அரசுடமையாக்கப்பட்டது.

நட்ட கணக்கு

சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இவ்வங்கி பல சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றது.  நிர்வாகக் கோளாறு மற்றும் ஊழல் கார ணமாக நிதி நிலைமை மிகமோசமாகி நட்ட கணக்கை காண்பித்தது. கடந்தாண்டு நவம்பர் மாதம் இரண்டாவது காலாண்டில் ரூ.2254 கோடி இழப்பை சந்தித்தது.  இந்த வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக  முன்பு எம். நரேந்திரா என்பவர் இருந்தார். அப்போது வங்கியில் தொழிற் சங்கம் என்ற பெயரில் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ஒரு சங்கத்தின் தலைவர் பால சுப்பிரமணியனுடன் இணைந்து  லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு ஆட்களை நியமித்த தாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. சிபிஐ விசார ணைக்கு பின்னர் பாலசுப்பிரமணியன் மட்டும் கைது செய்யப்பட்டார்.  ஆனால் நரேந்திரா கைது செய்யப் படவில்லை. 

தற்போது வங்கிகளை இணைக்கும் திட்டத் திற்கு முன்னோட்டமாக நிர்வாகத்தில் பல மாற் றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வங்கி யின் தலைமை நிர்வாக இயக்குநராக பி.பி.சென் குப்தா பெயரை  வங்கி நிர்வாக வாரியம் கடந்த 31 ஆம்தேதி பரிந்துரைத்துள்ளது.