tamilnadu

img

பிரெக்சிட் மசோதாவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் மசோதாவுக்கு, அந்நாட்டு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் கூட்டமைப்பில் 28 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பில் இருந்து வெளியேறுவதாக, கடந்த 2016-ஆம் இங்கிலாந்து அறிவித்தது. இதை அடுத்து, இங்கிலாந்து அரசு இதற்கான நடவடிக்கைகள் தொடங்கியது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு, நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாத நிலையில், இரண்டு முறை இங்கிலாந்து  நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடந்தது. இரண்டு முறை பிரதமர்களும் மாறினர். இதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் பிரதமராக, பதவியேற்ற பிறகு பிரெக்சிட் வரைவு மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவை மற்றும் மேலவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வரும் 31-ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது ஒப்புதலை அளித்துள்ளார். பிரெக்சிட் மசோதாவுக்கு ராணி அதிகாரப்பூர்வமான ஒப்புதலை அளித்துள்ளதாக செயலாளர் ஸ்டீவ் பார்க்கலே தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 
 

;