tamilnadu

img

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா தகவல் திருட்டு விவகாரம் : அபராதத்தை செலுத்த பேஸ்புக் ஒப்புதல்

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா தகவல் திருட்டு தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட 5 லட்சம் பவுண்டுகள் அபராதத்தை செலுத்த அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் 8.7 கோடி பயனாளர்களின் தகவல்களை, அனுமதியின்றி ஃபேஸ்புக் உதவியுடன் திருடியதாகக்  கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகார் எழுந்தது. சர்வதேச அளவில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. அமெரிக்க தேர்தலின்போது, திருடப்பட்ட தகவல்களின் மூலமே, டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் எனவும் கூறப்பட்டு வந்தது. மேலும், இது தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அமெரிக்கா மட்டுமின்றி மேலும், பல நாடுகளில் நடக்கும் தேர்தல்கள் இந்தக் கேம்பிரிட்ஜ் நிறுவனத்தின் தகவல் திருட்டின் மூலமே பல தலைவர்கள் வெற்றி பெற்றதாகக் கூறப்பட்டது.  இதற்கு பதிலளித்த பேஸ்புக் நிறுவனம், பயனாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் நிறுவனம் திருடியது உண்மை என்று ஒப்புக்கொண்டது.

இதைத் தொடர்ந்து, பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களைக் காக்கத் தவறிய புகாரில்  பேஸ்புக் நிறுவனத்துக்கு 5 லட்சம் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம், இந்த அபராத தொகையை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.