அல்பேனியா நாட்டில் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.
அல்பேனியா நாட்டின் பால்கன் மாநிலத்தில், கடந்த 26-ஆம் தேதி, 6.4 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் இடிந்த விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. மேலும், 650 பேர் காயடித்துள்ளதாகவும், இதில் 10 பேர் மிகவும் மோசமாக காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் துர்ரஸ் பகுதியில் சேதம் அதிகமிருப்பதால், 30 நாள்களுக்கு அங்கு அவசர நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அங்கு கட்டிட இடிபாடுகள் இடையே 46 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின்போது மாயமானவர்களைத் தேடும் பணியும், கட்டிடங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், மீட்புப் பணியில் ஐரோப்பியாவிலுள்ள பிற நாடுகள் உதவி இருப்பதாக அல்பேனியாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.