1828 - சுதந்திர உருகுவே நாட்டை உருவாக்கிய மாண்ட்டிவிடியோ ஒப்பந்தம், பிரேசில், அர்ஜெண்டினா நாடுகளிடையே எட்டப்பட் டது. தற்போதைய உருகுவே பகுதியில், பத்தாயிரம் ஆண் டுகளுக்குமுன்பே மனிதர்கள் வசித்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. தென்அமெரிக்கா வில் ஐரோப்பியக் குடியேற்றங்கள் ஏற்பட்டபோது இங்கு வசித்துக்கொண்டிருந்த பழங்குடியினத்தினர், சுமார் நான்காயி ரம் ஆண்டுகளுக்குமுன் இப்பகுதிக்கு வந்திருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மீன்பிடித்தல், வேட்டை ஆகிய வற்றை மட்டுமே அறிந்திருந்த இப்பழங்குடியினரின் மக்கள் தொகை, இருபதாயிரத்துக்கும் குறைவாகவே இருந்துள் ளது. இப்பகுதியில் முதல் ஐரோப்பியராக வந்த ஜுவான்- டயஸ்-டி-சோலிஸ் பழங்குடியினரால் கொல்லப்பட்டார். 1520இல் மெகல்லன் இப்பகுதிக்கு வந்தாலும், 17ஆம் நூற் றாண்டுவரை நிரந்தர ஐரோப்பியக் குடியேற்றங்கள் ஏற்படா மல், போச்சுகீசிய, ஸ்பானிய குடியேற்றங்களுக்கிடையே மோதல் ஏற்படாமல் தடுக்கும் இடைப்பகுதியாகவே இருந்தது. முதல் நிரந்தரக் குடியேற்றத்தை 1624இல் ஸ்பெயின் உரு வாக்கியது. போர்ச்சுகீசியர்களின் முதல் குடியேற்றம் 1680இல் உருவாக்கப்பட்டது. உருகுவே நதியின் கிழக்குக்கரையான இப்பகுதிகள் அப்போது பண்டா ஓரியண்ட்டல் என்று அழைக் கப்பட்டன. ஐரோப்பிய நாடுகளனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்திய நெப்போலியப் போர்கள், அவற்றின் குடி யேற்றங்களையும் விட்டுவைக்கவில்லை. இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல் முதலான குடியேற்ற நாடுகளுக்கி டையே நடைபெற்ற போர்களே, 19ஆம் நூற்றாண்டின் தென்அமெரிக்க நாடுகளின் வரலாற்றை ஆக்கிரமிக்கின்றன.
லைபீரியத் தீபகற்பத்தின் கட்டுப்பாட்டிற்காக நடை பெற்ற தீபகற்பப் போரின்விளைவாக ஏற்பட்ட அதிகார மாற்றங்களைத் தொடர்ந்து, அர்ஜெண்டினா விடுதலைப் போருடன் தொடங்கி, மே புரட்சியாக 1810இல் அப்பகுதி முழு வதும் பரவியது. 1822இல் பிரேசில் விடுதலையடைந்தபோது, சிஸ்ப்ளாட்டினா என்ற பெயரில் பிரேசிலுடனிருந்த இப்பகு திக்கு விடுதலைகேட்டு 1825-28 காலத்தில் நடைபெற்ற சிஸ்ப்ளாட்டைன் போரின் விளைவாக இந்த ஒப்பந்தம் உருவாகி, உருகுவேக்கு விடுதலை கிடைத்தது. விடுதலை யென்றாலும், அது அங்கு குடியேறியிருந்த ஐரோப்பியர்கள் அடைந்ததே தவிர சொந்த நாட்டு மக்கள் அடைந்தது அல்ல. ஐரோப்பியர் வருகைக்குப்பின் பழங்குடியினர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. எஞ்சியிருந்தவர்கள்மீது 1831இல் இனப்படுகொலை நடத்தப்பட்டு, பழங்குடியினர் முழுமையாக அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர்களில் உயிருடன் பிடிபட்ட நான்கு பேர், பாரீசுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அழிந்த இனம் என்ற பெயரில் காட்சி நடத்தப்பட்டது கொடூரத்தின் உச்சம். தட்பவெப்ப மாறு பாடுகளால் அவர்களும் விரைவிலேயே உயிரிழந்தனர். மறைந்திருந்து பின்னாளில் பிடிபட்ட பழங்குடியினரும் ஐரோப்பியர்களுக்கு வீட்டுவேலை செய்யும் அடிமைகளாக் கப்பட்டனர்.