tamilnadu

சாதிப் பெயரைச் சொல்லி இளைஞரை தாக்கி கொலை மிரட்டல்

 அரியலூர், மே 25- அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி சொக்கலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த விஜேய்ந்திரன் (32), மீன்சுருட்டி அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். இவரிடம் கடந்த 21-ம் தேதி அன்று சொக்கலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த தினகரன் என்பவர் கடனுக்கு பெட்ரோல் கேட்டார். கொடுக்க மறுத்த விஜேய்ந்திரனை சாதி பெயரை சொல்லி திட்டியும் அடித்து விட்டு சென்று, ‌அடுத்து சற்று நேரத்தில் தனது ஊருக்குச் சென்று ஆட்களுடன் வந்து விஜேய்ந்திரனை சர மாரியாக தாக்கி கொலை செய்து விடுவ தாக மிரட்டி சென்றுள்ளனர்.  

இதனை தொடர்ந்து போலீசாரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக் காததால் பாதிக்கப்பட்ட விஜேய்ந்திரன் வீட்டுக்கு சென்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இர. மணிவேல், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர்  மகாராஜன், கட்சியின் ஒன்றிய செயலாளர் வெங்கடா சலம், மாதர் சங்க மாவட்ட துணை தலை வர் மீனா, மாதர் சங்க ஒன்றிய செயலா ளர் அம்பிகா, மாதர் சங்க ஒன்றிய தலை வர்  மணியம்மாள் மற்றும் கொளஞ்சி யம்மாள், பி.பத்மா ரங்கநாயகி ஆகியோ ருடன் சென்று பாதிக்கப்பட்ட விஜேய்ந்திர னிடம் சம்பவத்தின் விபரங்கள் அனைத் தையும் கேட்டு அறிந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக காவல்துறையினரு டன் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி உரிய நியாயம் கிடைக்க வழி வகை செய்கிறோம் ஆறுதல் கூறினார். மேலும் விஜேய்ந்திரனுக்கு மனைவி ஆனந்தி, மகள்கள் கிருபா (10), அருணா (9), நபினா (4), தரணிகா(1) ஆகியோர் உள்ளனர்.

;