கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
தாராபுரம், செப். 15- பொருளாதார சரிவால் பாதிக் கப்படும் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை அறிவிக்கும் அரசு, விவசாயிகள் பாதிக்கப்படும் போது தலையிடுவதில்லை என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே குண்டடம் பெல்லம்பட்டி கருப்பராயன்கோவிலில் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார் தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன் கலந்து கொண்டு கூறியதாவது, பவர் கிரிட் நிறுவனம் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து நாங்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறோம். தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் உயர் மின் அழுத்த கோபுர திட்டம் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும் மேலும், ஏற்கனவே செங்கல்பட்டு மாவட் டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தோம். ஆனால் விவசாயி கள் அப்போது நம்பவில்லை. நாங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன் சொன்ன திட்டம் தற்போது வேகமாக நடை பெற்று வருகிறது.
மின்சாரம் தேவை என்பதில் எங்க ளுக்கு மாற்றுக் கருத்து இல்லை. மின்சாரம் இல்லாமல் வாழ முடியாத சூழலுக்கு வந்துவிட்டோம். ஆனால் அந்த மின்சாரத்தை கொண்டு செல்ல நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். இதுகுறித்து விவாதங்கள் நடந்துள்ளது. ஆனால் அரசு, விவசாயிகளின் பாதிப்புகளுக்கு செவிசாய்க்கவேயில்லை. சொந்த பட்டா நிலத்தில் எந்த அறிவிப்புமின்றி ஏன் டவர் லைன்களை அமைக்க வேண்டும். அரசு நினைத் தால் இந்த பிரச்சனைக்கு சுமூகமா னத் தீர்வு காண முடியும். பவர் கிரிட் நிறுவனம் என்பது ஒரு முறை முதலீடு செய்து விட்டு எப்போதும் லாபமீட்டக்கூடிய தொழி்ல் நிறுவ னம். அப்படியிருக்கும் போது, விவ சாயிகளுக்கு நட்ட ஈடு தருவதால் எந்த இழப்பும் இல்லை. விவசாயி களின் வாழ்க்கை எப்படி நிர்க்கதி யாகிப்போனால் என்ன என்பது குறித்து அரசுக்கு கவலையில்லை. அப்படியானால் சொந்த நிலமுள்ள விவசாயிக்கு என்னதான் உரிமை யுள்ளது. எனவே இதுபோன்ற போராட்டங் களால்தான் ஓரளவு அரசு, விவசா யிகளின் கோரிக்கையைக் கேட்கும் நிலைக்கு வந்துள்ளது. போராடாமல் விட்டுவிட்டால் அரசு கண்டுகொள் ளாமல் அவர்கள் வேலையை மட்டும் செய்துகொண்டிருப்பார்கள். எனவே விவசாயிகளை முறியடிக்கும் சத்தி உலகில் இல்லை. இதை உணர்ந்து விவசாயிகள் ஒன்றிணைந்து உறு தியானப் போராட்டத்தை நடத்த முன்வர வேண்டும். மேலும் வருகிற செப்.18ஆம் தேதி அனைத்து விவசா யிகள் சங்க கூட்டியக்கம் திருப்பூ ரில் நடத்தும் தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டத்திற்கு சிபிஎம் தனது முழு ஆதரவைத் தெரிவிக்கிறது எனக் குறிப்பிட்டார்.
தீர்மானம்
இக்கூட்டத்தில், அனைத்து விவசாயிகள் சங்க கூட்டியக்கத் தின் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்ட சங்க தலைவர்களை கைது செய்த தமிழக அரசைக் கண்டிக்கிறோம். உடனடியாக நிபந்தனையின்றி அவர்களை விடுதலை செய்ய வேண் டும். விவசாயிகளின் அனுமதியில்லா மல் நிலத்தை அளவீடு செய்யக்கூடாது. விவசாய சங்க தலைவர்களின் கைது நடவடிக்கைகளைக் கண் டித்து வரும் 20ஆம் தேதி குண்ட டத்தில் அனைத்து கட்சிகள் ஆதரவு டன் கண்டன பொதுக்கூட்டம் நடை பெறும் போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முன்னதாக இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில உதவி தலைவர் ஏ.எம்.முனுசாமி, மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூத னன், நாமக்கல் மாவட்ட செயலாளர் பி.பெருமாள், சேலம் மாவட்ட செய லாளர் ராமமூர்த்தி, ஈரோடு சிபிஎம் மாவட்ட செயலாளர் ரகுராமன், திருப் பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக் கண்ணன், தாராபுரம் தாலுகா செய லாளர் என்.கனகராஜ், வழக்கறிஞர் பி.மோகன், தற்சார்பு விவசாயிகள் சங்க நிர்வாகி பொன்னையன் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.