அரியலூர், ஆக.28- பெண்கள் குறித்து இழிவாக பேசிய ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தியை கண்டித்து அரியலூர் அண்ணா சிலை முன்பு மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பாக்கியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் எஸ்.மலர்கொடி, ஒன்றியச் செயலாளர் வி.தனலெட்சுமி, மாவட்டச் செயலாளர் பி.பத்மாவதி, மாவட்ட துணைத் தலைவர் கலையரசி, சிஐடியு மாவட்டச் செயலாளர் துரைசாமி, மாவட்டப் பொருளாளர் ஆர்.சிற்றம்பலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.