அரியலூர், ஜூன் 6-அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததைதீக்கதிர் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து அந்த கட்டிடத்தினை அகற்றி விட்டு புதியக் கட்டிடம் கட்ட பரிந்துரைக்கப்பட்ட நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக 2 கி.மீ.தூரத்தில் மேலகுடியிருப்பு கிராமத்தில் உள்ள தனியார் கட்டிடத்தினை வாடகைக்கு எடுத்து தற்காலிகமாக அந்தஅலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல் பட்டு வருகின்றனர். மக்களின்நலனுக்காக இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கே.மகாராஜன், ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.