tamilnadu

img

நீட் தேர்வு: அரியலூர் மாணவர் தற்கொலை

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அரியலூர் மாணவர் தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. 
அரியலூர் மாவட்டம் எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் விக்னேஷ் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில் வரும் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள சூழலில் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து செந்துறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
இந்நிலையில் மாணவனின் உறவினர்கள் தேர்வை ரத்து செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.