கொரோனா வைரஸ் மரபணு குறித்த ஆய்வுகள் நடத்த வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
சீனாவின் ஊகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா தொற்று இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார கூறி உள்ளதாவது “கொரோனா வைரஸின் மரபணு மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சிகளுக்கு நிறையக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்த நிறைய ஆராய்ச்சிகள் தேவை. அப்போதுதான் கொரோனா வைரஸ் மரபணு அளவில் எத்தகைய மாற்றம் அடைகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஸ்பானிஷ் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் போல் கொரோனா வைரஸ் நீட்டிக்காது. தொழில் நுட்பம், நவீன மருத்துவ உதவியுடன் 2 ஆண்டுக்குள்ளாகவே கொரோனா வைரசை முடிவுக்கு கொண்டு வர முடியும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.