tamilnadu

img

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா

கொரோனா வைரஸ் தாக்குதல் விவகாரத்தை காரணம் காட்டி உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலக சுகாதார அமைப்பு சரியாக செயல் படவில்லை என அமெரிக்க டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவையாக செயல் படுகிறது என்று டிரம்ப் தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டை முன் வைத்து வந்தார்.  உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா ஆண்டுதோறும் சுமார் 450 மில்லியன் டாலர் வழங்கி வருகிறது.  கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு முறையாக நடந்து கொள்ளாததால் அதற்கு வழங்கும் நிதியை ரத்து செய்வதாக டிரம்ப் மிரட்டல் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தார். 
இந்த நிலையில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கு ஆரம்ப கட்டத்தில் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டது.  நாங்கள் கோரிய மற்றும் பெரிதும் தேவைப்படும் சீர்திருத்தங்களைச் செய்யத் தவறியதால், உலக சுகாதார அமைப்புடனான எங்கள் உறவை நாங்கள் இன்று முதல் துண்டித்து கொள்ளப்போகிறோம். கொரோனா வைரஸ் குறித்து சீனாவிடம் இருந்து உலகிற்கு பதில்கள் தேவை. எங்களுக்கு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.