கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை ஆல்பா பெட்டின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தற்போது கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆல்பாபெட் 5-ஆவது நிறுவனமாக கருதப்படுகிறது. இந்நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆல்பாபெட் நிறுவனத்தில் தலைமை செயல்அதிகாரியாக இருந்த லாரி பேஜ்க்கு பதிலாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆல்பா பெட் நிறுவனத்தின் சிஇஓவாக நியமித்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காக லேரிக்கும் சேர்ஜேவக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.