tamilnadu

img

ஜார்ஜ் பிளாய்ட் மரணம்: போராட்டத்தின் எதிரொலியாக மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட போலீசார்

ஜார்ஜ் பிளாய்ட் மரணத்தை தொடர்ந்து அமெரிக்காவை உலுக்கி வரும் போராட்டங்களின்  எதிரொலியாக காவல் துறையினர் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளனர். 
அமெரிக்காவில் மினிசொட்டா மாகாணத்திலுள்ள மியாமி பொலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் காவல் துறையினரால் படு கொலை செய்யப்பட்டார்.  காவல் துறையினர் பூட்ஸால் மிதித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. போலீசாரின் நடவடிக்கைக்கு  கடும் கண்டனம் தெரிவித்து அமெரிக்காவின் பல பகுதிகளில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த போராட்டம் தற்போது அமெரிக்காவில் தலைவிரித்தாடி வந்த நிறவெறிக்கு எதிரான போராட்டமாக  மாறி உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்ட்மரணத்துக்கு மன்னிப்பு கோட்டு மியாமி போலீசார் போராட்டக்கரார்கள் முன் மண்டியிட்டனர். மேலும் போராட்டக்காரர்களைக் கட்டித் தழுவியும் ஆறுதல் கூறினர்.