tamilnadu

img

அமெரிக்கா: விமானம் ஆற்றில் பாய்ந்ததால் பதற்றம்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 136 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம், தரையிறங்கும் போது நிலை தடுமாறி விமான நிலையம் அருகே இருந்த ஆற்றில் பாய்ந்தது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.  

விபத்துக்குள்ளான விமானம், குவாண்டநாமோ வளைகுடா கடற்படை நிலையத்தில் இருந்து புறப்பட்ட வணிக ரீதியிலான விமானம் ஜாக்சன்வில்லில் உள்ள கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது நிலை தடுமாறி ஜான்ஸ் ஆற்றில் பாய்ந்தது என்று விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். ஆழமற்ற பகுதியில் விமானம் பாய்ந்ததனால், விமானம் நீரில் மூழ்கவில்லை. இதன்காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி, இரவு 9.40 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.