tamilnadu

img

உணவு, மருந்து கிடைக்கவிடாமல் ஈரான் மீது அமெ. புதிய தடை

டெஹ்ரான், செப்.21- ஈரானியர்களுக்கு உணவு, மருந்து ஆகியவை கிடைப்பதற்கு அமெரிக்கா புதிய தடை விதித்து உள்ள தாக ஈரான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. சவூதி அரேபியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா ஒரு புதிய பொருளாதார தடைகளை விதித்தது. அந்த தடை ஈரானின் மத்திய வங்கி மற்றும் செல்வ நிதியை இலக்காகக் கொண்டது ஆகும்.  ஈரானின் மத்திய வங்கிக்கு எதிராக அமெரிக்கா வின் புதிய பொருளாதாரத் தடைகள் சாதாரண ஈரானி யர்களுக்கு உணவு மற்றும் மருந்து கிடைப்பதை தடுக்கும் முயற்சியாக உள்ளது என ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவேத் சரீப் கண்டனம் செய்துள்ளார். மேலும் இந்த நடவடிக்கை அமெரிக்க விரக்தியின் அறிகுறியாகும் எனக் கூறியுள்ளார். “அவர்கள் மீண்டும் மீண்டும் தடைவிதிப்பதன் பொருள் ஈரானிய தேசத்தை மண்டியிடவைக்க வேண்டும் என்பது தான். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியடைந்து விட்டது. ஈரானிய மக்களுக்கு உணவு மற்றும் மருந்து கிடைப்பதை தடுப்பது ஆபத்தானது. ஏற்றுக்கொள்ள முடி யாதது” என்றும் அவர் கூறினார்.