உளுந்தூர்பேட்டை, செப். 24- விழுப்புரம் மாவட்ட த்தின் தெற்குப்பகுதி முழுவதும் திங்களன்று (செப்.23) இரவு பெய்த பலத்த மழையால் பல்வேறு குளம், ஏரி, குட்டைகளில் ஓரளவு தண்ணீர் தேங்கி யுள்ளது. மேலும் காட்டு எடையார் கிராமத்தில் தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் வீட்டின் மீது இடி தாக்கிய தால் சிமெண்ட் ஓடுகள் சிதறி மேற்கூரை இடிந்து விழுந்தது. மாவட்டத்தின் தெற்குப் பகுதியான சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, உளு ந்தூர்பேட்டை, திருக்கோவி லூர் ஆகிய பகுதிகளில் திங்களன்று இரவு பலத்த மழை பெய்தது. கடும் சத்தத்துடன் இடி மற்றும் பலத்த மின்னலுடன் சுமார் இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதில் உளுந்தூர்பேட்டை ஒன்றியம் காட்டுஎடையார் கிராமத்தில் தலித் மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் லோகநாதன் என்பவரின் வீட்டின் மீது இடி விழுந்தது. நல்வாய்ப்பாக வீட்டினுள் இருந்த 6 பேரும் உயிர் தப்பிய நிலையில் சிமெண்ட் சீட் உடைந்து நொறுங்கி மேற்கூரை கீழே விழுந்தது. காட்டுஎடையார் கிராமத்தில் இடிவிழுந்து வீடு சேதமான லோகநாதனின் வீட்டிற்கு உரிய நட்டஈடு வழங்கவேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் வீ.ரகுராமன் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார்.