tamilnadu

முறைகேடுகளில் ஈடுபட்டால் நடவடிக்கை

விழுப்புரம், ஆக.1- ரேசன் கடையில் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது:  விழுப்புரம் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளைக் கண்காணிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் (வரு வாய்த் துறை), மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்  தனி வட்டாட்சியர் (குடிமைப் பொருள்கள்), தனி வட்டாட்சியர்  (பறக்கும்  படை) ஆகிய அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர். விழுப்புரம் நகரில் உள்ள வி.சி.எஸ். 5 என்ற நியாய விலைக்  கடையில் ஆய்வு செய்ததில் இருப்பு குறைந்தது கண்டறியப்பட்டு  ரூ. 14,560 அபராதம் விதிக்கப்பட்டது. செஞ்சியை அடுத்த மொட்டை யூரில் ஆய்வு மேற்கொண்டதில், இரு கடைகளில் இருப்பு குறைவு, அதிகம் இருந்தது கண்டறியப்பட்டு முறையே ரூ. 25,000, ரூ. 7,950 அபராதம் விதிக்கப்பட்டன. வானூர் அருகே தனியார் வீட்டில் 850 கிலோ அரிசி, 50 கிலோ  சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை பதுக்கி வைத்திருந்தது கண்டறி யப்பட்டது. திண்டிவனம்-செஞ்சி சாலையில் உள்ள அரிசி ஆலையில்  பதுக்கப்பட்ட 5,360 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து  நியாய விலைக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும். பொது விநி யோகத் திட்டப் பொருட்கள் கடத்தல் தடுக்கப்படும். ரேசன் கடை களில் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.