tamilnadu

img

ஆவின் பால் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது

சென்னை,பிப்.15- ஆவின் ஒப்பந்த டேங்கர் லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை (பிப்.14)  நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கினர். 2018 ஆம் ஆண்டுடன் ஆவின் பால் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் முடிவடைந்தும் தற்போது வரை புதிய ஒப்பந்தம் போடா ததை கண்டித்து, லாரி உரி மையாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் 300-க்கும் மேற்பட்ட ஆவின் டேங்கர் லாரிகள் இயங்காது என, ஆவின் பால் டேங்கர் லாரி  உரிமையாளர் சங்க தலைவர்  சுப்பிரமணி தெரிவித்துள் ளார். இந்த வேலைநிறுத்தம் காரணமாக பால் விநியோ கம் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

டேங்கர் லாரி ஒப்பந்த தாரர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால், ஆவின் பால் விநியோகம் பாதிக்காத வகையில் அனைத்து நடவ டிக்கைகளும் மேற்கொள் ளப்பட்டுள்ளதாக பால் வளத் துறை ஆணையர் தெரி வித்துள்ளார்.  இது தொடர்  பாக அறிக்கை வெளி யிட்டுள்ள பால்வளத்துறை ஆணையர் வள்ளலார், சென்னை பெருநகர பால்  பண்ணைகளுக்கு தேவை யானபாலை, பல்வேறு மாவட்டங்களில் இருந்து  தனியார் பால் டேங்கர்  கள் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக குறிப்பிட்டுள் ளார். மாநிலத்தில் தங்கு  தடையின்றி பால் கிடைக்க  அனைத்து நடவடிக்கை களும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் தெரி வித்துள்ளார்.