tamilnadu

img

எல்ஐசி நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பதை கண்டித்து ஊழியர் ஆர்ப்பாட்டம்

எல்ஐசி நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பதை கண்டித்து வேலூர் கோட்ட அலுவலகம் முன்பு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டத் தலைவர் பழனிராஜ், எல்.ஐ.சி முதல்நிலை அதிகாரிகள் சங்கம் நிர்வாகிகள் சுரேந்திரன், சரவணன், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க  நிர்வாகிகள்  வீ.குபேந்திரன்,  தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோன்று ராணிப்பேட்டை கிளை அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் கிளைத் தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். வேலூர் கோட்ட பொதுச் செயலாளர் தா.வெங்கடேசன், கிளை மேலாளர் முத்தையன், காப்பீட்டு ஊழியர் சங்கம் சுப்பிரமணி  உட்பட பலர் கலந்து கொண்டனர். அரக்கோணம் கிளை அலுவலகத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.