வேலூர், மே 30-ஆற்காடு வட்டம் திமிரி ஒன்றியத்தில் உள்ள பொன்னம்பலம் கிராமத்தில் கடந்த ஆறு மாதமாக குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து விதொச மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுபதி தலைமையில், ஆரணி-செய்யார் தேசிய நெடுஞ் சாலையில் மறியல் செய்தனர்.தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பொது மக்களை சமரசம் செய்து குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.