tamilnadu

img

ஏலகிரியில் சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

வேலூர், ஜூன் 20- திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் கள் க.மோகன்  காந்தி, பி.பாலசுப்பிரமணியன் ஆகியோர்  கொண்ட ஆய்வுக் குழுவினர் ஏலகிரிமலை யில் மேற்கொண்ட கள ஆய்வில் பழைமை யான கல்வெட்டு மற்றும் நடுகல் ஆகிய வற்றைக் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து க.மோகன்காந்தி கூறுகை யில், “ஏலகிரி மலை நிலாவூர் வயல் வெளி யில் மேற்கொண்ட கள ஆய்வில் கி.பி. 11ஆம்  நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலச் சோழர்க ளின் கல்வெட்டு, நடுகல் ஆகியவை ஒரே  இடத்தில் இருப்பது தெரிய வந்தது. சுமார்  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜெயங் கொண்ட  சோழ மண்டலத்தில் எழில் நாடு இருந்ததை யும், அப்போது ஏற்பட்டப் போரில் ஊர் அழிந்த போது இந்த வீரனும் இறந்தான் என்பதை  இக்கல்வெட்டு எடுத்துரைக்கிறது” என்றார். ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்பது பல்லவர் காலத்தில் தொண்டை மண்ட லம் என்று அழைக்கப்பட்ட பகுதி. பிற்கால சோழர்களின் ஆளுகையின் கீழ் இப்பகுதி வந்த பிறகு ஜெயங் கொண்ட சோழ மண்ட லம் என்று பெயர் மாற்றம் பெற்றதை அறிய  முடிகிறது என்றும் அவர் கூறினார். அந்த கல்வெட்டின் அருகிலேயே நடுகல்  உள்ளது. அந்த நடுகல்லில் உள்ள வீரன்,  கல்வெட்டு குறிப்பிடும் வீரனாக இருக்க லாம். 5 அடி உயரமும், 3.5 அடி அகலமும்  கொண்ட பெரிய பலகைக் கல்லில் வீரனின்  தோற்றம் பிரமாண்டமாக செதுக்கப்பட்டுள் ளது. வலது கையில் நீண்ட வாளும், இடை யில் கச்சுடன் கூடிய குறுவாளும் உள்ளன.  வலதுபக்கம் கொண்டையும், காதுகளில் உள்ள காதணிகளும் நுட்பமாக வடிவ மைக்கப்பட்டுள்ளன என்றார்.