tamilnadu

img

உதகை அருகே சுருக்கு வலையில் சிக்கி சிறுத்தைபுலி பலி -ஒருவர் கைது

உதகை அருகே மஞ்சகொம்பை கிராமத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பன்றிக்கு வைத்த சுருக்கு வலையில் சிறுத்தைப்புலி சிக்கி உயிரிழந்தசம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 55 சதவீத வனப்பகுதி மட்டும் தனியார் தேயிலை தோட்டங்களில் சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான், பன்றி போன்ற வனவிலங்குகள் உலா வருவது வழக்கம். நேற்று உதகை அடுத்த மஞ்ச கொம்பை கிராமத்தில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவர் தேயிலைத் தோட்டத்தில் பன்றியை இறைச்சிக்காக பிடிக்க சுருக்கு வலை வைத்துள்ளார். பன்றிக்கு பதிலாக சிறுத்தை புலி சிக்கியது சிக்கிய சிறுத்தைபுலி நீண்ட நேரம் போராடி இறந்துள்ளது. சிறுத்தை உருமல் சத்தம் கேட்ட கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர் பார்த்தபோது சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை இறந்தது தெரியவந்தது.     

இதை தொடர்ந்து விசாரணை நடத்தியபோது அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சுருக்குவலை வைத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராஜேந்திரன் கைது செய்யப்பட்டு உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.