tamilnadu

img

மேற்கு திரிபுரா தொகுதியில் மறுவாக்குப் பதிவு நடத்துக!

அகர்தலா, ஏப்.29-திரிபுரா மாநிலத்தில் மேற்கு திரிபுரா நாடாளுமன்றத் தொகுதி முழுவதிலும் மறு வாக்குப் பதிவு நடத்தப்படவேண்டும் என இடது முன்னணி வலியுறுத்தியுள்ளது. இந்த கோரிக்கையைமுன்வைத்து அகர்தலாவில் திங்களன்று முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான மாணிக் சர்க்கார் தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது.மேற்கு திரிபுரா நாடாளுமன்றத் தொகுதியில் ஏப்ரல் 11 அன்று நடந்தவாக்குப்பதிவில் மிகப்பெரும் மோசடியில் ஈடுபட்ட பாஜகவினரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தும், மேற்கு திரிபுராவின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டுமென வலியுறுத்தியும் இந்த பேரணி நடைபெற்றது.


இப்பேரணியின் போது இடது முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரும், வேட்பாளருமான சங்கர் பிரசாத் தத்தாகூறுகையில், ஏப்.11 அன்று வாக்குப்பதிவு முடிந்தபின், மேற்கு திரிபுராவில்464 மையங்களுக்கு மறு வாக்குப்பதிவுநடத்த வேண்டுமென கோரிக்கை வைத்தோம். மற்ற வாக்குப்பதிவு மையங்களிலும் பாஜகவினர் நடத்தியமோசடிகளை கண்டறிந்து, அத்தொகுதியில் உள்ள 864 மையங்களுக்கும் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டுமென வலியுறுத்தினோம். இதுகுறித்த ஆய்வில், ஒரு தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்கு மையங்களிலும் ஆளும் பாஜக மற்றும் அதன் குண்டர்கள் மிகப்பெரும் மோசடியில் ஈடுபட்டு, நாட்டின் ஜனநாயகத்தையும், பொதுமக்களின் வாக்களிக்கும் உரிமையையும் முற்றிலும் அழித்துவிட்டனர்; இந்த மோசடிகளால், 50 சதவீத வாக்காளர்கள் அவர்களது வாக்கை பதிவு செய்ய முடியவில்லை என்பதை உறுதி செய்துள் ளோம் என்றார்.இதுகுறித்து இடது முன்னணியின் கன்வீனர் பிஜன் தர் கூறுகையில், ஜனநாயக உரிமையான வாக்களிக்கும் உரிமை, திரிபுராவை ஆளும் பாஜக அரசினால் அழிக்கப்பட்டுவிட்டது. ஏப்.11 வாக்குப்பதிவு நாளிலிருந்து இந்திய தேர்தல் ஆணையத்திடம், மேற்குதிரிபுரா தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்திட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்துகிறோம். ஆனால், வாக்குப்பதிவுமுடிந்து 18 நாட்கள் கடந்த பின்பும்,தேர்தல் ஆணையம் மறு வாக்குப்பதிவிற்கான அறிவிப்பை வெளியிடவில்லை. மறுவாக்குப் பதிவு தேதியை அறிவிக்கும் வரை இடது முன்னணி தொடர்ந்து பலகட்ட போராட்டங்களில் ஈடுபடும் என்றார்.(ஐஎன்என்)