தஞ்சாவூர் ஜூன்.20- படித்து முடித்து விட்டு வேலைக்காக இளைஞர்களின் வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் வகையில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் ஆர்.ரெத்தி னவேல் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் என்.ராஜசேகர் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். வட்ட துணைச் செயலாளர் முத்துக்கிருஷ்ணன், கோட்டப் பொருளா ளர் செந்தில்குமார், சசிகலா, சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக வட்டப் பொருளாளர் மருததுரை நன்றி கூறினார். இதே போல் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு இடங்க ளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.