திருச்சிராப்பள்ளி, ஜூலை 7- திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி வடுகர்பேட்டை பகுதிகளில் 100 நாள் வேலை வழங்க வேண்டும். தினமும் குடிநீர் வழங்க வேண்டும். வீரமாமுனிவர் நகர் காமராஜபுரம் பகுதிக ளில் போடப்படாத சாலைகளை உடனே அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் புள்ளம்பாடி பிடிஓ அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் அறி விக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிடிஓ தலைமையில் திங்க ளன்று அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மாதர் சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் கோமதி, புள்ளம்பாடி ஒன்றியச் செயலாளர் என்.மல்லிகா உள்ளி ட்டோர் பங்கேற்ற பேச்சுவார்த்தையில், செவ்வாய்க்கிழமை முதல் நூறு நாள் வேலை வழங்கப்படும். பழுதடைந்த மின்மோ ட்டார் சரி செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குள் கொள்ளிடம் குடி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலை, சாக்கடை பிர ச்சனைகள் உடனுக்குடன் சரி செய்து தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டம் தற்காலிக மாக கைவிடப்பட்டது.