tamilnadu

ராணுவ காலனி மக்களுக்கு  குடிமனைப் பட்டா வழங்கக் கோரிக்கை  

திருச்சிராப்பள்ளி, மார்ச் 2- திருச்சி மாநகராட்சி 30-வது வார்டு மாஜி ராணுவ காலனி 1 முதல் 17 தெருக்க ளில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கக் கோரி மார்க்சி ஸ்ட் கட்சி தலைமையில் மாஜி ராணுவ காலனி குடி யிருப்பு மக்கள் பட்டினி போராட்டத்தை அறிவித்தி ருந்தனர். இதனையடுத்து கிழக்கு வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொன்மலை பகு திக்குழு செயலாளர் கார்த்தி கேயன், பகுதிக்குழு உறுப்பி னர்கள் மணிமாறன், சீனி வாசன், கிளை செயலாளர் கள்சேகர், கணேசன், டிஆர்இயு முன்னாள் தலைவர் தெய்வ நாயகசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.